Posts

Showing posts from July, 2020

ஏகாந்தம்:-

இறப்பற்று இருக்கிறேன்  என எண்ணியதும்,  என்னுள்ளிருந்தே  கிளர்ந்து   மலையென உயரத்  தொடங்கினேன்....  இயங்க வேண்டும்  என தோன்றியதும்  உடலைப் பிளந்து  நன்னீரில் குதித்து  தங்க மீனென  நீந்தி செல்கிறேன்.... பசியெடுத்ததும்,  சுழித்து ஓடும்  நதியின் முகவாயில்  எகிறித் துள்ளும்  மீன்களை கவ்வி பறந்து சென்று  மலை மீதமர்ந்து  உண்கிறேன்.... உறக்கம் வந்ததும்,  நட்சத்திர கம்பளத்தை  போர்த்தியவாறு,  யாதொரு சிந்தனையுமற்று  இரவென விரிந்து  கிடக்கிறேன்... ---------Jinovy

பிறவிச் சாபம்:-

அன்று : நட்சத்திர குவியல்களுக்கு  மத்தியில் கிடத்தப்பட்டிருக்கிறாள்  அவள்..  வைரமென ஜ்வலிக்கும்  விழிகளும்  மோகம் சிந்தும்  உதடுகளுமாய்..  பலமடிப்புகள் கொண்ட  விசித்திர ஆபரணமொன்றினால் அவளது கைகளும்  கால்களும் பிணைக்கப்பட்டுள்ளன.. விம்மி எழும்  மார்பும்,  பெருமூச்சும் ஓய்ந்ததும்  என்னை ஒருகணம்  உற்று நோக்கிவிட்டு  மீண்டும் அயர்ந்து  கொள்கிறாள்....  இன்று: நினைவுகளின் மடிப்புகளை  கிழித்தவாறே  காதினுள் பாய்கிறது  நகரத்தின் பேரிரைச்சல்.. நெரிசல்களுக்கு நடுவே  புடைத்து வீங்கிக்கிடக்கும்  கைப்பையை  இரு கைகளிலும்  மாற்றி மாற்றி  தாங்க முயலுகையில்,  சமீபத்தில் சவரம் செய்து  படிகாரமிட்ட அக்குள்களில்  ஏற்படும் காந்தாலும்  எரிச்சலும்  யதார்த்த வாழ்வை  மேலும் ரணப்படுத்துகின்றன.. புழுக்கத்தின் கசகசப்பில்  மீசை மயிரில்  ஒரு நொடி தங்கி  வழியும் வியர்வையை  அனிச்சையாக சுவைத்தபடி  சாய்ந்து நிற்பதற்கு  வாகான இருக்கையை  நோக்...

இளஞ்சிவப்பு மயில்தோகை

மயில்தோகையின் வண்ணங்களில்  சிக்கிக் கொள்கிறது  அந்த சிறுமியின் கவனம்.. எல்லா காட்சிகளின்  பின்னணியிலும்  கருநீலமும் அடர்பச்சையும்  குழைந்து கிடக்கின்றன..  இரவில் வானம்  முழுதும் மயில்தோகைகள்  பரப்பி கிடப்பதாய்  தோழியிடம் விவரிக்கிறாள்..  புத்தகப் பை  சிருடையின் கழுத்துப்பட்டை என  அவள் கரம்பட்ட  இடத்திலெல்லாம் கொத்து கொத்தாய்  மயில்தோகை தட்டுப்படுகிறது .. இவ்வாறு முடிவிலா  மயில்தோகை அனுபவம் கொண்ட  ஒரு சிறுமியின் புனைக்கதையை எழுத எண்ணியபடி  குறிப்பேட்டை திறந்த  அந்த யுவனுக்கு  காணக்கிடைக்கிறது,  இளஞ்சிவப்பும் வெள்ளையுமாய்  ஒரு மயில்தோகை....  Jinovy

வெற்றிடம்:-

இட்டு நிரப்ப முடியாத  வெற்றிடத்தில் வைக்கப்படுகிறது  ஒரு உலகம் .. பிய்த்து எறியப்பட்ட சிறகுகளுடன்  வலம் வருகிறார்கள்  எனக்குப் பிடித்த தேவதைகள் .. பறக்கத் தெரிந்த  குதிரைகள் யாவும்  குருடர்களிடம் ஒப்படைக்கபட்டிருகின்றன  ... மனிதர்களின் கண்களில்  முன்னொரு காலத்தில்  ஈரம் இருந்ததாய்  ஒரு வேசி கூறிக்  கேள்விப்பட்டேன் ... யாரும் அறிந்திருக்கவில்லை போலும் ,  இருப்பினின்று சுருங்கிகொள்ள  துவங்கியிருந்தது அந்த உலகம்,  மீண்டும் ஒரு வெற்றிடமாய்... --------------- Jinovy

இறுதியாக:-

நீ நம்புவது கடினம், இப்போது  நிழலற்ற ஒரு எறும்பு  எனது இருபது வருட  தனிமை  மீதேறி  ஊர்ந்து கொண்டிருக்கிறது....    அசைவிற்கொருமுறை  ஈனஸ்வரத்தில்   முனகிக் கொண்டிருக்கிறது என்னை சுமந்து கொண்டிருக்கும்  இந்த கிழட்டு நாற்காலி ....  பார்வை மழுங்கிய  மூக்குக் கண்ணாடி வழியே  நான் பார்க்க முயற்சிப்பதெல்லாம்   நரைத்துப் போன  எனது மீசை மயிரில்  என்றோ பதிந்த  உன் கைரேகையை   மாத்திரம் தான்....  நீ இறந்த அன்றே  என் காமத்தை  உனது புடவையொன்றில்  சுற்றி வைத்துவிட்டேன்  அது பசியில்  இறந்தாலும் பரவாயில்லை....  ஒவ்வொரு கணத்திலும்  உனது நினைவுகளால்  இந்த வீடு நிரம்பிக்  கொண்டிருந்தது.. இனிமேல் அவ்வாறு இல்லை ஏனெனில்  நான் மரித்து இப்போது  இருபது நிமிடங்களாவது  ஆகியிருக்கக் கூடும்.... --------------------Jinovy

யவனம்:-

எல்லா திசைகளிலிருந்தும்  கமழ்ந்தபடி படர்ந்து  கொண்டிருக்கிறது இருள்..  வெளிச்சமற்ற வீதிகளில்  நிழல்கள் யாவும்  செத்துக்கிடக்கின்றன..  போதையில் சரிந்தபடி  சிரித்துக் கொண்டிருக்கிறது  அல்லிக்கொடி  அதை செங்குத்தாக  தாங்கியவாறு  தியானித்துக் கொண்டிருக்கிறது  மரக் கம்பம்.. இரவின் யவனத்தை  தம் மீது அச்சேற்றிக் கொண்ட   கார்பன் காகிதங்கள்  விடியலுக்குள்  நுழையத் துவங்கியிருந்தன..  ----- Jinovy

Majestically Zen:

A lone wolf  is hungry.. Tired of walking for miles, Unluck is all he ‘ve got for the day... Then sees  A tiger, Who holds a deer By throat And awaits the pulse Of it's pray to fall.... having sensed the falling pulse of  its Prey, The tiger gazes  the hungry wolf…. The starving alpha  decides to war with the king of animals…. He crouches in front of The big cat  showing his canine…. The Tiger drops  His meat ,  Gazes the alpha again, And roars to the jungle  to hold its breath…. Poor alpha accepts  his defeat to the roar and backs off…. Then the Majestic Cat Clutches the meat with his jaw and throws to  The poor one…. honouring the  valour of alpha He walks back to his cave…. Seeing the Master Alpha’s eyes glow enlightened, And, he is starving no more. --------- Jinovy

கருணைக்கரம்:-

தீயெனச் சுட்டதில் உதறிய கரத்தினின்று விழுந்தோடிய மந்திர ரட்சை அறுத்த பாவத்தின் வேர்கள் மீது தடம் பதித்து நடந்த யுவதியொருத்தியை கண்டதும் சந்நியாசம் துறந்து மிருக உருக்கொண்டு இளமையை வேட்டையாடிக் களித்த மனிதனை புறந்தள்ளியோடி எதிர்ப்பட்ட பள்ளமொன்றில்  மீந்திருந்த கற்பைக்  கொண்டு அக்கினி வளர்த்து பிரவேசிக்க புகுந்தவளை காக்க முளைத்ததாம் கருணையின் கை..... —---—---------- Jinovy

போதையும் தெளிவும் :-

விளிம்பை நோக்கி  விரைந்து கொண்டிருக்கிறேன், வாழ்க்கையின் அறைகூவலுக்கு  பதிலேதுமில்லை என்னிடம்.... மீதம் இருப்பதெல்லாம்  இரு கோப்பையளவு  மது மட்டுமே!! முதல் கோப்பை  முடிந்த பின் விளிம்பை  எட்டி விடுவேன்.... அடுத்த கோப்பையை  விளிம்பில் அமர்ந்தே  பருகலாம்.... "விடிந்ததும் போதை தெளியுமே?!" யோசித்துக் கொண்டே  இரண்டாம் கோப்பையை  பருகினேன்.... பின்னர்,  விளிம்பை தாண்டிய  இரு அடிகளை  காற்றில் வைத்தேன் .... ------------------------- Jinovy

நான் யார்? :-

இன்றைய தூரத்தை  கடந்த பின் களைத்துப் போய் இரவின் போர்வைக்குள்  நுழைந்து கொள்கிறேன்.... தீர்க்கவியலாத குழப்பங்களின் அதிர்வெண்கள்  பிரபஞ்சத்தின் அமைதிக்குள் ஒருங்க ஆரம்பிக்கின்றன.... சூன்யமாய்ப் போன  இந்த இரவு என்னை பிரதியெடுத்து வெளி எங்கும் நானாக  தன்னை பிரதிபலிக்கிறது.... ஏதேனும் ஒரு கருந்துகளாய், கோளாய், நட்சத்திரமாய், தூசு மண்டலமாய், எல்லாவற்றினுள்ளும் நிரப்பப்படுகிறேன்.... பசி எடுக்கும் போதெல்லாம் அவற்றின் கொஞ்சத்தை  விழுங்கியும் கொள்கிறேன்.... பேரண்டம் மடிந்து சுருங்கி கொஞ்சமாய் மாறி என் வாய்க்குள் தன்னை முழுவதுமாய் திணித்துக்கொள்கிறது.... நான் என்னவாகிவிட்டேன் எனத் தெரியவில்லை, ஆனால் விழுங்கவியலாத  இரு வார்த்தைகளை இப்போது உச்சரித்து  மட்டும் பார்க்கிறேன்  "நான் யார்!?!" ----------------- Jinovy

புனைவு விதி:-

ஒரு சொல் ஒரு வாக்கியம் பிம்பங்களும் நபர்களும் இவையாவுமோ அல்லது  இவற்றோடு இன்னபிறவுமோ புனைவுகளாய் சங்கமித்த நொடிகளில் பிறக்கிறது ஒரு கதை.... நெஞ்சுக்கூட்டின் மத்தியில் நெளிந்து உருப்பெருகும் தயக்கத்தின் கோரப்பசிக்கு சிக்க மறுத்து பேனாவின் முனைவழியே சரிந்து விழுகின்றது.... கதைமாந்தர் சொல்லும்  கதைகளாகவும்  கதை வழியே  பயணிக்கும் கணங்களில் காரணங்களாகவும் மர்மங்களாகவும் கதாசிரியன் ஒரு மாயஉலகின்  எல்லாமுமாக கசிந்துறைகிறான்.... சலனமற்றுப் பார்க்கும் கருவிழிகள் வழியே மூளையின் வலப்பக்கத்தை அடைந்து கற்பனையை கீழே சொட்டவிட்டு மனப்பதிவுகளின் கலவையுடன்  இடப்பகுதியை அடையும் அதியதார்த்த சாத்தியக்கூறுகளாய் தன்னை சிதைத்துக்  கொள்கிறான்.... பிரபஞ்ச பெருவெடிப்பின் முதல் தோற்றத்தையும், கருந்துளைக்குள் யாவும் புகுந்து கொள்ளும் இறுதி அழிவையும் தன்னுள் நிகழ்த்திப் பார்க்கும் லாவகத்தை உண்ணும்போதோ உறக்கத்திலோ அனிச்சையாய் செய்து  கடக்கிறான்.... இப்போது கூட,  எங்கோ எழுதப்படுகின்ற  ஒரு கதையில் நீங்களும் நானும் கதாபாத்திரங்களாய் வாழ்ந்து கொண்டிருக்க, நம் கதைகளை தனதாக...

வித்தைக்காரன்:-

வழிப்போக்கன் ஒருவன்  துணையுடன் மலையுச்சியை  கடந்து கொண்டிருந்தேன்.... அவன் கதைப்பாடல்களை  பாடிக்கொண்டே  விண்மீன்களை பிடுங்குவதாக பாவனை செய்தபடி முன்னே சென்றான்.... நான் களைத்துவிட்டதாக கூறி அமர்ந்ததும், தன் உள்ளங்கையில் மிதந்து கொண்டிருந்த நட்சத்திரங்களை என்னிடம் காட்டிச் சிரித்தான்.... வாய் கொள்ளா ஆச்சரியத்துடன் நான் பார்த்துக் கொண்டிருக்கையில், அவன் பிரபஞ்ச ரகசியங்களின் அறையொன்றை வானவெளியில் திறந்து அதனுள்ளிருந்த விண்மீன் குவியலை நோக்கிக் கையிலிருப்பவற்றை வீசியெறிந்து கதவை அடைத்தான்.... பின்னர் பாடலை  விட்ட இடத்திலிருந்து தொடர்ந்தபடி என்னை பின்தொடரச் சொல்லி சைகைகாட்டி செல்லலானான்.... நான்  அந்த அறைக்குள்ளோ அல்லது அவன் உள்ளங்கையுள்ளோ அகப்பட்டிருப்பதாக  நினைத்துக் கொண்டேன், அவனது பரிகாச சிரிப்பொலி எனக்குள்ளிருந்து எதிரொலிக்கத் துவங்கியது.... ------------------ Jinovy

தேவதை:-

முன்னொரு பிறவியில்  இரவின் காயங்களை  மறைத்த  நிலவொளியில்  என் நரம்புகளை மீட்டி  என்னை உயிர்ப்பித்தாய்.... அடுத்துவந்த ஒன்றில், உனது நிழல்  தரையில் படர  நீ சென்ற போது  உன் தெய்வீகம்,  விட்டில் பூச்சியாய்  இறப்பின் தருவாயில்  இருந்த  என்னை தேவதையாய்  உருமாற்றி நகர்ந்தது.... துயரங்களின் அடர்ந்த  மூலைகளில்   நீ மறைந்து  கொண்ட நாட்களிலெல்லாம் , நான்   கையில் மந்திரக்கோலுடன்  உன்னைத் தேடி  பறந்து கொண்டிருந்தேன்.... இறப்பற்ற இந்த  ஆகாயம்  என் மீது  வெம்மையையும் குளிரையும்  மாற்றி மாற்றி  உமிழ்ந்தது .. என் சிறகுகள்  காய்ந்து சருகாகின  என் மந்திரக்கோல்  வலு இழந்து  சுருங்க ஆரம்பித்திருந்தது .... அந்த தருணம்  சிதைந்த உருவுடன்  நீ, ஒரு மலரின்  மேல்  அயர்ந்து படுத்திருந்தாய்.. உன்னைக் கண்டதும் எனது ஆத்மா  பிரபஞ்சத்தின் மொத்த  பரவசத்தையும்  எனக்குள் விகசிக்க  செய்தது .... உடனே,  என்னை ஒரு  புழுவாய்...

கடவுளின் கதை:-

சாத்தான் எனப்படுவோர்  பயணித்து வரும்  பாதையில் மௌனமாய் அமர்ந்திருந்தார்  கடவுள்... கடவுளைக் கண்டதும் சாத்தான்கள்  ஒரு கணம் நின்றனர்.. அந்த விகார உருவை பரிகசித்தனர்.. அவனது கைத்தடியை முறித்து எறிந்துவிட்டு, தங்கள் வழி தொடர்ந்தனர்... சற்று நேரம்  பொறுத்து தேவதைகள் எனப்படுவோர் வந்தனர்.. கடவுளின் காயங்களுக்கு மருந்திட்டனர், அவனது விகாரத்தை  போக்கி தம்மோடு  அழைத்து சென்றனர்... ஊருக்குள் சென்றதும் கடவுளின் எழிலைக்காட்டி சிறிது பணம்  சம்பாதித்தனர்.. இரவானதும் கடவுளை உறங்க வைத்துவிட்டு, தங்கள்  வழி தொடர்ந்தனர்... விடிந்து எழுந்ததும் கடவுளின் ஆசி பெற சத்திரத்தின் வழிநெடுகிலும் மனிதக் கூட்டம் வரிசைக் கட்டியது.. காக்க வைத்தமைக்காக  வசைமாரி பொழிந்தது ... கடவுள் தான் கடவுள் என்பதை மறந்துவிட, முன்னர் பலமுறை முடிவு செய்ததைப் போல, இப்போதும் முடிவுசெய்தார்.. தன் அழகை சிதைத்துக் கொண்டார், மனிதர்களின் அறியாமையை சபித்தார்... மீண்டும் , தான் முன்பு அமர்ந்திருந்த இடத்திற்கு திரும்பிச்சென்றார்... மீண்டும், ஏற்கனவே பலமுறை தான் மறந்திருந்த தன்னை, நினைவு கூர முயற...

பிழைத்திருத்தல் :-

காகிதத்தை மடித்து கப்பல் செய்ய முயன்றவாறே வெகுதூரத்தை நடந்தே கடந்திருந்தேன்.... கப்பலின் முனை  மழுங்கலாய் வரவும் எரிச்சலுடன் அதை தார்ச்சாலையில் எறிந்துவிட்டு அந்த அத்துவானப்  பாதையை வெறிக்கத் துவங்கினேன்.... இரவு முழுவதும் வயிறு முட்டக் குடித்திருந்த ஒயினை பற்றி யோசித்ததும் வாயில் எச்சில்  ஊறத் தொடங்கியது.... "பேண்ட் பாக்கெட்டில்  சிகரெட் ஒன்றேனும்  மிச்சமிருந்தால்" என்ற நப்பாசை ஒரு கணம்  எழுந்து, பின் மங்கி இருண்டது.... "கழுதையும் கரடியும்" என சபித்தவாறே  நேற்றைய சண்டையில் குருதி பீறிட்டத்தின் வலியை, தோள்பட்டையில் கட்டிட்ட காயத்தின் மீது பொருத்தி பார்த்துக்கொண்டேன்.... படுக்கையில், என் இடத்தில் படுத்து அவனும் அனுமதித்து அவளும்.. விநோதம், என்னைக் கண்டதும்  தங்கள் நிர்வாணத்தை மறைக்க  அவர்கள் திணறியது.... அவர்களுக்கு உறுத்தும்  என, கழட்டி  கட்டில் விளிம்பில்  தொங்க விடப்பட்ட முகப்பிட்ட தாலிக்கொடி என்னை உறுத்தியது.... "டமார்" என் கவனம் உடைப்பட்டது.. பின்னே சற்று  தூரத்தில், ஒரு லாரியும் காரும் மோதியிருப்பது புலப்பட்டது.. லாரி...

மகள் :-

அந்த சின்னஞ்சிறிய  ஊஞ்சல் பலகையில் அவளை அமர்த்தி சற்றே விசைகொடுத்து தள்ளினேன்.. அவளது குதூகலத்தின் அலைவரிசைகள் எங்கிலும் எனது பிம்பம் சிறிதும் பெரிதுமாய் முளைத்துக் கிடந்தது.... மின்மினி பூச்சிகள் தங்கள் வயிற்றில் சுமந்து வந்த  ஒளிச்சட்டியை கண்டதும் அவளது கண்கள்  உப்பி பெருத்தன.. நான் ஆளுயர  மின்மினியாய் உருமாறி  அவளை அணைத்துக் கொள்கையில், அந்த குளிர்ச்சியான வெளிச்ச மழையில் அவள் நனைந்து மகிழ்ந்தாள்.... பலூன் கடைக்குள் நுழைந்ததும் அவள் பலூன்களை போலவே மிதந்து சென்றாள்.. பலூன்களை சகசிறுமிகளாகவோ அல்லது தன்னை ஒரு பலூனாகவோ நினைத்துக் கொண்டு அவைகளிடம் கதையளந்தாள், இடையிடையே  தனது காலால் இடறி என்னையும் மிதக்கவிட்டாள்.... நாங்கள் வீட்டிற்கு வந்து சேர்ந்த  நேரத்தில், அவள் என்  தோள் மீதே  தூங்கி போயிருந்தாள்.. கனவுகள் கண்டுகொண்டிருப்பாள்  என யூகித்தேன்.. அவளது வற்றாத கனவுப் பூக்களுக்கு நீர் வார்க்க  நான் உள்ளிறங்கியபோது, அங்கே அவள்  எனது சந்தோசத்தின்  வலைப்பின்னல்களை நேர்த்தியாக  பின்னிக் கொண்டிருந்தாள்.... ---------Jinovy

உருமாற்றம் :-

நட்ட கல் ஒன்றின் எதிரில் அமர்ந்து  மந்திரங்களை உச்சரித்துக் கொண்டிருந்தேன்.... எங்கிருந்தோ வந்த பட்டாம்பூச்சியொன்று  கண நேரம்  அதன் மீதமர்ந்து தன்னை இளைப்பாற்றிக் கொண்டு  மீண்டும் காற்றில்  தவழ்ந்து சென்றது.... இருட்டிலிருந்து தம்மை  வெளிப்படுத்திக் கொண்ட நாகமொன்றும் கீரியும் சண்டையிட்ட படியே  நட்ட கல்லைச் சுற்றி வட்டமடித்து மீண்டும் புதருக்குள் மறைந்து கொண்டன.... சிதறும் கவனத்தை இறுக்கிப் பிடித்திழுத்து எனது பார்வையை நட்ட கல்லின் மத்தியில் புதைத்தபடி மந்திரங்களின் இறுதிக்கட்டத்தை நெருங்கி கொண்டிருந்தேன்.... திடுமென நட்ட கல் ஆயிரம் தலைகளையும்  ஈராயிரம் கை கால்களையும் கொண்டதாய் விரிந்தெழுந்து நடனமாடத் தொடங்கியது.... சுற்றியுள்ள யாவும் அதே துடிப்புடன் மேல் கீழாவோ பக்கவாட்டிலோ அதிர்வதாய் தோன்றியது.... என்னை புறந்தள்ளி தன் முன்னே  பரப்பிக் கிடந்த  பிரபஞ்சத்தின்  ஒவ்வொரு அணுக்களின்  மீதும் பாதம் பதித்து ஆடிய  அந்த நட்ட கல், பின்னர் சூட்சமமாய்  உருமாறி என்னுள்  புகுந்து கொண்டதும்  நான் ஒரு  ஆல விதையாய் மாற்றப...

உணர்விழக்கும் ஐம்பூதங்கள் :-

யாரோ ஒருவர் தாகத்தின் பெயரால்  ததும்பிக் கொண்டிருக்கிறது  மண்குடுவை நீர்.. மழை நனைத்தபின் மண்குடுவை உள்ளும் புறமும் ஈரமாய், புலனாகா துவாரங்களின் ஊடறுத்து தம்மைத்  தாமே  நனைத்துக்கொள்ளும் நீர்த்துளிகள்.... வெற்றுநிலம் கிடைப்பிணமாய் புதை குழி தோண்டி ஆழ்ந்துவிட்ட  கடந்தகால நினைவுகளின் மட்கிய கரித்துண்டுகள் வைரங்களை தம்முள் ஒளிவிர்த்தபடி, மேலுக்கு எளிதில் உடையும் திடப்பொருளாய்.... சூனியம் என்போர் அயனிகள் என்போர் பரந்தவெளி உணர் மண்டலம், எண்ணங்களை உடைத்து நுணுக்கி பொடியாக்கி கறைபடியாமல் காலத்தினூடே கடத்தி செல்லும் சொல்லாமல்விட்ட  சொற்கள், சாபங்கள்  மற்றும் இன்ன பிற .... சுவாசித்த புனிதம் உட்சென்று அங்கம் தொடுகையில் கிளர்ந்தெழும் வெப்பம்  கடைக்கோடி நரம்புகளை  மீட்டி பக்கவிளைவுகளாய் உணர்வுகளை உமிழும் சுரப்பிகளின்  உட்புகுந்து இயக்கமாய் சுழற்றி வரும் பம்பர நிலை மீண்டெழுந்து நொடிப்பொழுதில் வெளியேறும் அமில எச்சம்.... புகையா வன்மம் தொட நடுங்கி படைகள் வழிவிடும் சிவந்த கங்குகள் களைப்படையாது போரிட்டு பழுத்த இரவுகளில்  மினுங்கி மினுங்கி விரிந்த விழ...

Stillness:-

In the midst of dinner,  Master said "The Enlightenment  lies in  the stillness of time".... "How's that even possible? " Student asked.... Master answered nothing.. But,  continued  with his supper.. While chewing,  his face showed that he enjoyed  every bite of  the rice cake.... On bed,  Student kept on  thinking about his master's statement.. And then,  He fell asleep in sometime.... The student suddenly woke  with a jolt,  and ran to  his master's.... The Master is by the window,  sitting still and peeping.... Right after seeing the master,  The student  shouted excitingly "MASTER!" and said "I figured that out,  The stillness of time?.. it must be  ""Forgetting the presence  of time"" Isn't it? " The Master  reacted nothing. But,  he just said "Forget it. Come. Join me. Let's taste some sake" ------------------Jinovy

நிழலின் கதைகள்:-

என்  முன்னே  மடிப்புற்றுக் கிடக்கும்  நிழல் சொல்லும் கதைகள்  ஆயிரம்....  முதன்முறை மதுக்குடித்து  தலை கிறுகிறுத்த இரவில்,  பால்கனியின் மீதேறி நின்று  எக்காளமிட்ட போது சுவருக்கும் தரைக்குமாய்  மடிப்புற்றும்  நீண்டும் கிடந்தது  எனது நிழல்....  கொளத்தூர் செல்வியுடன்  களிப்பதெற்கென,  யாவரும் உறங்கிய  நேரத்தில்,  அம்மாவின் பீரோவை  திருட்டுச் சாவி போட்டு  கைவிடும் இடைவெளிக்கு  அளவாய் திறந்து கமுக்கமாய் பணத்தை  துழாவுகையில்,  சுவருக்கும் பீரோவிற்குமாய்  மடிப்புற்று   நெளிந்து கொண்டிருந்தது  அந்த விகார நிழல்.. தலைப் பகுதி மட்டும்  பழுப்பேறிய ஜன்னல்கதவில்  உள்வாங்கி நீண்டிருந்தது.... செபாஸ்டியனுடன் சேர்ந்து  கார்களை களவாடிய போதும்,  பைசல் மரணத்திற்கென  ஆயில் முருகனின் கோஷ்டியை  துண்டாடிய போதும்,  நைஜீரிய மாணவர்களின்  போதை கிடங்கை  ஆக்கிரமித்த போதும், எங்கெங்கோ மடிப்புற்றுக்கிடந்த  எனது நிழல் என்னிடம்  ஏதோ சொல்லி முனகிய...

களவாடி:-

முன்பொருமுறை  பாதசாரியாக நெடும்பயணம்  மேற்கொண்டிருந்தேன்.. அப்போது தான்  அந்த விசித்திரமான மனிதனை சந்திக்க நேர்ந்தது ....  “நான் தாரையைச்  சேர்ந்த ஒரு யாத்ரீகன்” என்றென்னை அறிமுகப்படுத்திக்  கொண்டதும்,  தானொரு  "பிம்பங்களின் களவாடி" என பெருமிதத்துடன்  அவன் கூறிக்கொண்டான்....  “கண்ணாடியை களவாடலாம்,  பிம்பங்களை களவாடுவதாவது?!” சிரிப்புடன் வியந்தேன்.... “ஏன் இல்லை” என்றான் அலட்சியமாக,  தனது பீடியை  பற்ற வைத்தபடி.... “அவை சுயமோ திடமோ  அற்றவை. அவற்றைப் பற்றி பிடிக்க முடியாதே? ” குழப்பத்துடன் வினவினேன்.... “ஆனால் பறிகொடுக்க  முடியுமல்லவா” என்றான் விநயத்துடன்.... எனக்கு எதுவும்  விளங்கவில்லை. மலங்க மலங்க  விழித்தேன்.... என் தவிப்பை  புரிந்துகொண்டான் போலும்.. எனது தோளை  ஆறுதலாக தட்டி,  என்னை அருகிலிருந்த பாறையொன்றின் மீது  அமர்த்தினான்.. பின்னர் என் முகத்திற்கு  மிக நெருங்கி வந்து  “இன்னொரு முறை  சொல்லும். நீ யார்? “ என்றான்.... “நான்” என்று சொல்ல  வாயெடுக்கையில் தான் கவன...

வைரவன் குகை:-

வெகு நேரமாய்  மனம் ஏனோ  அக்கினி வெயிலில்  காயும்  பட்டமரம் போல்  புழுக்கப்பட்டு கிடந்தது.... “சரி சற்றேனும்  கண்மூடி அமர்ந்திருப்பம்” என,  வைரவன் குகையினுள்  குளுகுளுத்து கிடந்த  வாகான பாறையொன்றை  தூசு தட்டி  ஏறி அமர்ந்தேன்.... கண் மீது  இமை கவிழும் முன்னே  சன்னமாய் பிளந்திருந்த  வெடிப்பொன்றை அப்பாறைமேல்  காணுகையில்,   மனம் ஒரு குத்தூசியாய்  மாறி சத்தமின்றி  அதனுள்ளிறங்கி  சப்பணமிட்டு அமர்ந்து  கொண்டது.... வெற்றுடம்போ பாறைமேல்  ஒன்றன்மீதொன்றாக அடுக்கப்பட்ட  கூழாங்கல் உருப்படிகளென  நெட்டுக்குத்தாய் ஜில்லிட்டு  கிடக்கின்றது.... மலையுச்சியில் குளியலுக்கு  காத்துக்கிடக்கும்  தண்டாயுதபாணியின் மேல்,  அடிவார தடாகத்திலிருந்து  மொண்டு வந்த தண்ணீர் குடத்தை  வரிந்து சுருட்டிய  கச்சம் சகிதமாய் ஐயர்வாள்  கவிழ்த்துப் பிடிக்கையில்,  கொட்டிய நீர் வீழ்ச்சியென  விழுந்து  தடாகத்தின் அடிநோக்கி  குகையை அமிழ்த்தி  மூழ்கடித்தது...

இரு நண்டுகள்:-

இந்தப் படுக்கை  கொஞ்சம் எனக்கும்  நிறைய வெறுமைக்குமாய்  இடம் கொடுத்தபடி  தரையை தழுவிக்  கொண்டிருக்கிறது ....  ஜன்னல் விளிம்பில்  வைக்கப்பட்டிருக்கும் கண்ணாடி  கலனினுள்  நான் வளர்க்கும்  இரு நண்டுகள்  ஒன்றையொன்று நிமிண்டியபடி  அதன் குறுகலான எல்லைக்குள்  வளைய வருகின்றன.... அவற்றின் இரவு  உணவிற்கான நேரமிது.. சில மீன் குஞ்சுகளையோ  பச்சை மாமிசத்  துண்டுகளையோ எதிர்பார்த்து  தமது மொடமொட  கரங்களை நீட்டி  என்னிடம் சமிக்ஞை  செய்கின்றன.... இடப்பெயர்விற்கு இடமின்றி,   கலனினுள்  அவற்றை அடைத்ததிற்கான  பாவத்தின் சாபமொன்று  எந்நேரமும்  எனது தலையைச்  சுற்றி வட்டமடித்தபடி  இருக்கின்றது.. இருக்கட்டும்.... (ஒரு பெருமூச்சு) உறக்கம் வராவிடினும்  கண்ணை மூடிக்கொண்டு  கிடக்கும்  பொதுவான அனுஷ்டானத்தினை  நானும் மேற்கொள்கிறேன்..  அவ்விரு நண்டுகளைப்  போலவே  எனது கண்களும்  ஒன்றையொன்று நிமிண்டிக்  கொள்வதாய்  கற்பனை செய்து  பா...