Posts

Showing posts from October, 2020

நெற்றிக்காசு:-

எனக்கும் முன்  சென்று சொர்க்கம்   சேர்ந்துவிட்டிருந்தன  எனது கல்லறை  மீது இறைக்கப்பட்ட பூக்கள்...  தோள் வலிக்க  சுமந்திருந்த பாரங்களை  வழி நெடுக  ஒவ்வொன்றாய்  தளர்த்தி விட்டு  இம்மையின் எல்லையைச்  சென்றடைந்தேன்....  மறுமைக்குக் கொண்டு  செல்லும் படகோட்டி,  கைத்தாங்கலாய் என்னை  உள்ளிழுக்க,  அசைந்தாடும் அப்படகின்  மீதெங்கும்  கல்லறை பூக்களின்  வாடை கப்பிக்கிடக்கிறது.... "நானும் சொர்க்கம்  சென்று சேர்வேனா?" எனது கேள்வியை  பொருட்படுத்தாது அப்படகோட்டி  துடுப்பை பலமாக  போட்டு,  அசுரத்தனமாக படகை   வலித்துக் கொண்டிருந்தான்.... பின்னர்,  வழிச் செலவிற்கென  உற்றார் கொடுத்த ஒற்றை நாணயத்தை  சுண்டி விட்டு  பூவா தலையா  போட்டுப்  பார்த்து  அக்கேள்விக்குப்  பதிலை நானே தேடிக்கொண்டேன்.... ----------Jinovy

பிக்க்ஷை:-

கந்தலாடை போர்த்திய  பெண்ணுருக் கொண்டிருந்தது  அந்த இரவு....  மினுங்கும் பொத்தல்களின்  வழியே அவளது தேகம்  ஒளிக் கற்றையென  கசிந்து கொண்டிருந்தது....  தோஷம் தீர  வனமெங்கும் அலைந்த  இறைவன்,  கபாலம் ஒட்டிக்கிடக்கும்  தனது வலக்கையை  அன்றைய பிக்க்ஷைக்காக  அவளிடம் ஏந்தினார்....  இறைவனை தொடர்ந்து  வந்த  சாபத்தின் சாயை,  அவரது தற்போதைய  நிலை கண்டு  எக்காளமிட்டுச் சிரித்துத்  தீர்த்தது.... மௌனத்தில் ஆழ்ந்திருக்கும்  இறைவனின் வதனமெங்கும்  திரிதிரியாய் பிண்ணிக் கிடக்கும்  பாம்புகளைப் போன்று விதியின் ரேகைகள்  படர்ந்து கொண்டே  சென்றன.... இரவென்னும் அப்பெண்  தன்னையே அர்ப்பணிக்க  முனைந்தாள்.. தனது நட்சத்திரப்  பூக்களை உகுத்தாள்.... உதிரும் ஒளிச் சில்லுகள்  கபாலத்தை நிரப்பத்  தொடங்கியதும்,  அகோரப் பசியால்  ஆட்பட்டிருக்கும் இறைவன் அவற்றை மொத்தமாக  கவிழ்த்து  அவசர கதியில்  விழுங்கத் தொடங்கினார்....  தொண்டைக் குழிக்குள்  எக்க...