அசுவாரசியமான மனிதர் :-
அசுவாரசியமான மனிதர்:- கூடடைந்த பறவைகளின் உரத்தக் குரல்கள் அந்த மனிதனை, அண்ணார்ந்து அருகேயிருந்த மரத்தை பார்க்கச் செய்தன.. அந்தப் பேருந்து நிறுத்தத்திற்கு அவர் வந்திருப்பது இதுவே முதல் முறை.. "அவை ஒன்றையொன்று விசாரித்துக் கொண்டிருக்கக் கூடும்" என நினைத்தார்.. இருந்தாலும் கீழேயிருந்து பார்ப்பதற்கு காற்றில் அசைந்தாடும் ஒவ்வொரு இலையும் தமக்கு தாமே பேசிக் கொண்டிருப்பது போல் அவருக்குத் தோன்றியது.. புன்னகையுடன் சுற்றியுள்ள சக பயணிகளை நோக்கினார்.. யாரும் அந்நிகழ்வில் துளி கூட ஈடுபாடு காட்டாதது மட்டுமல்ல, அம்மரத்தின் அருகில் கூட நிற்காததைக் கண்டு வெகுவாக அசூசையடைந்தார்.. "அசுவாரசியமான மனிதர்கள்" என தன்னுள்ளே முனுமுனுக்கையில், சொத்தென ஒரு எச்சம் அவரது நீல சட்டையில் விழுந்து தெறித்து படறியது.. "ச்சி" என்றபடியே தனது கைக்குட்டையை எடுத்து "விருப்" என அதனை வழித்துவிட்டு, அவஸ்தையோடு தனது சட்டையைப் பார்த்து பின்னர் அண்ணார்ந்து, அந்த மரத்தை எரித்து விடுவதைப்போல முறைத்தார்.. மேலும் ஒரு எச்சம் அவர் கண்முன்னேயே ஒரு வெடிகுண்டைப் போல மேலி...