சூதாடியின் வரம்:-
கணத்திற்குக் கணம் கையை மீறி நகர்ந்து கொண்டிருக்கிறது எனது வாழ்க்கை.... நான் ஒரு சூதாடி.. நீங்கள் பந்தய விடுதிகளுக்கு செல்வோரேயானால், ஏதேனும் ஒன்றில் என்னை நிச்சயம் பார்த்திருக்கக் கூடும்.... அதிர்ஷ்டத்தை நம்பி சூதாட வருவோர்க்கு, அது சூதின் இன்ன பிற நுட்பங்களோடு நுணுக்கமாக பின்னப்பட்டது என்பது பெரும்பாலும் தெரியாது.... அதிர்ஷ்டக்காரன் என முத்திரையிடப்பட்டுள்ளேன் என்பதால், பழக்கப்பட்ட நண்பர்கள் தங்கள் பணத்திற்காக விளையாட என்னையே அழைப்பர்.... எனது கோரிக்கை ஒன்றும் பெரிதல்ல.. விளையாட்டிற்கென ஒரு கட்டணம் ஜெயிப்பதில் கால்பங்கு.... புதிதாக வருவோர்க்கு சூதின் வாகு புரியாது.. அவர்களில் பெரும்பாலோனார் முதல் சுற்றிலேயே எதிரிலிருப்போரை முற்றாக துடைத்துவிட வேண்டும் என துடிப்பர்.... ஆனால், ஒரு திறமையான சூதாடி, தான் பந்தயத்தில் இருப்பதே அடுத்தவர் உணராத வண்ணம் அமந்திருப்பான்.. புலனாகாத மனிதனைப் போல.... அவனது குறிக்கோள் முதல் சுற்றோ, இரண்டாவதோ, மூன்றாவதோ கிடையாது.. எந்த சுற்றில் தோற்றவரின் மூரக்கமும் ஜெயித்தவரின் ஆணவமும் உச்சகட்டமாக மோதுமோ அந்த...