நடுக்கத்துடன் எழுதிக் கொண்டிருக்கிறேன்.. எனது இறுதியே இறுதியான வார்த்தைகளை.... உள்ளங்கையுள்ளிருந்து கசிந்து வரும் வியர்வைத் துளிகள் அடுத்த வரிக்கான தாளின் பகுதியை ஈரப்படுத்தியிருக்கின்றன.... இதே வேகத்தோடு அடுத்த வரி சென்றால், ஈரத்தில் ஊறிப்போயிருக்கும் தாள் கிழிந்துவிடலாம் அல்லது பிசுபிசுத்து பரவப் போகும் பேனா மையால் எழுத்துக்கள் மங்கிவிடலாம்.... கிழியாது எழுதினாலும், பின்னர் இக்கடிதம் கிடைக்கப் பெறுவோர் அம்மங்கலான எழுத்துக்களைப் புரிந்துகொள்ள திணறுகையில் நான் கடத்த விழைந்த உணர்வு மட்டுப்பட்டுவிடுமோ என்கிற அச்சம் உண்டாகவே செய்கிறது.... ஈரமான பகுதியை விடுத்து அதற்கடுத்த பகுதியில் எழுதுகையில் வரிகளுக்கான இவ்விடைவெளி எதற்கோ நேர்ந்துவிட்டத்தைப் போல தோன்றிவிடுமோ என்கிற குழப்பமும் வராமலில்லை.... தற்கொலை செய்து கொள்வதை விடவும் இது பெரும் வாதையாய் மாறிக் கொண்டிருப்பது இங்கு கவனிக்கத் தக்கது.... எதுவும் வேண்டாமென புதுத் தாளெடுத்து எழுத ஆரம்பிக்கின்றேன்.... ஆனால் முன்பிருந்த தற்கொலை முனைப்பின் வீரியம் எழுத்தாய் மாற ஏனோ திணறுகிறது.... "அது ஏன்?" என வலிந்து யோசிக்கையில், பேனாவைப் பிடித...
கணத்திற்குக் கணம் கையை மீறி நகர்ந்து கொண்டிருக்கிறது எனது வாழ்க்கை.... நான் ஒரு சூதாடி.. நீங்கள் பந்தய விடுதிகளுக்கு செல்வோரேயானால், ஏதேனும் ஒன்றில் என்னை நிச்சயம் பார்த்திருக்கக் கூடும்.... அதிர்ஷ்டத்தை நம்பி சூதாட வருவோர்க்கு, அது சூதின் இன்ன பிற நுட்பங்களோடு நுணுக்கமாக பின்னப்பட்டது என்பது பெரும்பாலும் தெரியாது.... அதிர்ஷ்டக்காரன் என முத்திரையிடப்பட்டுள்ளேன் என்பதால், பழக்கப்பட்ட நண்பர்கள் தங்கள் பணத்திற்காக விளையாட என்னையே அழைப்பர்.... எனது கோரிக்கை ஒன்றும் பெரிதல்ல.. விளையாட்டிற்கென ஒரு கட்டணம் ஜெயிப்பதில் கால்பங்கு.... புதிதாக வருவோர்க்கு சூதின் வாகு புரியாது.. அவர்களில் பெரும்பாலோனார் முதல் சுற்றிலேயே எதிரிலிருப்போரை முற்றாக துடைத்துவிட வேண்டும் என துடிப்பர்.... ஆனால், ஒரு திறமையான சூதாடி, தான் பந்தயத்தில் இருப்பதே அடுத்தவர் உணராத வண்ணம் அமந்திருப்பான்.. புலனாகாத மனிதனைப் போல.... அவனது குறிக்கோள் முதல் சுற்றோ, இரண்டாவதோ, மூன்றாவதோ கிடையாது.. எந்த சுற்றில் தோற்றவரின் மூரக்கமும் ஜெயித்தவரின் ஆணவமும் உச்சகட்டமாக மோதுமோ அந்த...
Comments
Post a Comment