மதியப் படம்:-

அடர்ந்து நிறைந்திருக்கிறது
வெய்யில்

சோம்பலுடன் ஆங்காங்கே
தேங்கிக்கிடக்கிறது
நிழல்

வெய்யிலுக்குத் தீனியாய்
நிழலுக்கு பாரமாய்
உமிழ் நீர் ஒழுக
அலைகிறது நாய்

நமட்டுச் சிரிப்புடன்
பட்டும் படாமலும்
கடந்து போகிறது
தென்றல்

---------- Jinovy

Comments

Popular posts from this blog

இறுதிக் கடிதம்:-

சூதாடியின் வரம்:-

சங்கிலித் தொடர்:-