கூண்டிலடைப்பட்ட பறவைகளும் தன்னைச் சேர வேண்டி, இறப்பற்றிருக்கிறது ஆகாயம்.... ---------------------------------- வானுக்கு இடம் கொடுத்து தாழப் பறக்கிறது ஒரு பறவை.... _-----_------_-------_---- அடைப்பட்ட ஒவ்வொரு பறவையும் கூண்டிலிருந்து ஆகாயத்துக்குச் செல்லும் பாதையைப் பார்த்தபடியே வாழ்ந்து கொண்டிருக்கின்றன. இறக்கைகள் பாரமாயிருப்பினும் எந்தப் பறவையும் அவற்றை இழக்கத் துணிவதில்லை. ஊஞ்சல்களையும், கிளை விரித்த மரத் தண்டுகளையும் விட — சிறிதே சிறிதளவு ஆகாயத்தைக் வேண்டியே போவோர் வருவோரிடமெல்லாம் ஒவ்வொரு முறையும் கீச்சிடுகின்றன. அவற்றுக்கு கடவுள் நம்பிக்கை உண்டா என்று தெரியவில்லை. ஆனால் — கடவுளுக்கு அவற்றின் மீது மிகுந்த நம்பிக்கை உண்டு: தமக்கிடப்பட்ட வாழ்வை எந்த விசனமுமின்றி வாழ்ந்து கழித்துவிடும் என்று -----_-------_-------_------- பருவம் கடக்கும் முன்னரே பறவைகள் இடம்பெயர்ந்து விட்டன… மீதமுள்ள பருவத்தை வெற்றுக் கூடுகள் சுமந்து கொண்டிருக்கின்றன… ----_------_-------_--------- The moment i taste the sea in the fish, i become the universe.... ------------------------ Afte...